சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2016 11:04
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். அமாவாசை மற்றும் ராமபிரான் அவதரித்த ராமநவமியை முன்னிட்டு இன்று காலை 6:00 மணிக்கு சுப்ரபாதம், 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்தியபடி பூஜை, 8:00 மணிக்கு மூலவர் பெருமாள் ராமன் லட்சுமண, பரத சத்ருகன் அனுமன் சீதா சமேத பட்டாபிராமனாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சி கால பூஜையும், மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது.