Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ரமலான் சிந்தனைகள்: எல்லாம் உங்கள் ... கட்டடப்பணியின் போது கிடைத்த சுவாமி சிலைகள்! கட்டடப்பணியின் போது கிடைத்த சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமிதோப்பு தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஆக
2011
11:08

தென்தாமரைக்குளம் : சாமிதோப்பு அய்யா வைகுண்டசுடவாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழாவின் 11ம் நாளை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடந்தது. விழாவின் 10ம் நாளான நேற்று முன்தினம் இரவு கலையரங்கில் "தானம் ஞானம் என்ற அய்யா வழி சி.டி., வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. வக்கீல் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். பூஜித குரு பாலபிரஜாதிபதி சி.டி.,யை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அய்யாவழி பாடல்கள் எழுதிய கவிஞர் முருகரசு, தயாரிப்பாளர் தமிழன் கலைக்கூடத்தின் நிறுவன தலைவர் வக்கீல் பாலசந்திரன் மற்றும் கவிஞர்கள் நாராயணதாஸ், பூவை ராஜன் உட்பட பலர் பேசினர். தொடர்ந்து கவிஞர் சீதாராமனின் "அய்யா வைகுண்டர் என்ற பக்தி நாடகம் நந்தது. பின்னர் அய்யா வைகுண்டசுவாமி இந்திர வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் 11ம் நாளான நேற்று காலை அய்யாவுக்கு பணிவிடையும் காலை 11 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா கொலு வீற்றிருக்கும் தேரோட்டம் துவங்கியது. தலைப்பாகை அணிந்த அய்யாவழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகர அரகர என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தேர் வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தெருவை சுற்றி வந்த திருத்தேர் மாலை 5 மணிக்கு பிரசித்தி பெற்ற வடக்குவாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்தது. இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, தேனி மற்றும் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐயா வழி பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 10 மணிக்கு அய்யா ரிஷப வாகனத்தில் தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இன்று அதிகாலை பணிவிடை, 6 மணிக்கு திருக்கொடியிறக்கம் ஆகியன நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குருக்கள் பால பிரஜாதிபதி அடிகளார், வக்கீல் பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் மற்றும் ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar