கன்னிவாடி: கார்த்திகையை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. சந்தனம், பன்னீர், பால் உள்ளிட்ட திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயிலில், கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.