Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் 22ல் ... சுவேதாரண்யேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம்; பாலாற்றிற்கு செல்லும் வரதர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
12:04

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், வரும் வெள்ளிக்கிழமை இரவு, சித்ரா பவுர்ணமி அன்று நடவாவி உற்சவத்தை முன்னிட்டு பாலாற்றில் எழுந்தருளும் விழா நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும், சித்ரா பவுர்ணமி அன்று செவிலிமேடு அருகே உள்ள பாலாற்றில் வரதராஜ பெருமாள் எழுந்தருள்வார், அந்த திருவிழா, வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.அதையொட்டி, வரும் வியாழக்கிழமை, இரவு 9:00 மணியளவில், பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கோவிலில் இருந்து புறப்பட்டு அமுதபடி தெரு, வழியாக செவிலிமேடு, அப்துல்லாபுரம் துாசி, நத்தகொள்ளை, வாகை போன்ற கிராமங்களில் சுவாமி சுற்றி வந்து, வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அய்யங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலில் எழுந்தருள்வார். அங்கு திருமஞ்சனம் முடிந்த பின், அப்பகுதியில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருள்வார். அதை தொடர்ந்து, அன்று இரவு, 9:00 மணியளவில், அங்கிருந்து புறப்பட்டு பாலாற்றிற்கு வந்தடைவார். அங்கு, திருமஞ்சனம், பிரம்ம ஆராதனம் நடைபெறும். இத்திருவிழாவை காண, காஞ்சிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாலாற்றிற்கு வருவர். வெள்ளிக்கிழமை, இரவு, 1:00 மணியளவில் பாலாற்றில் இருந்து புறப்பட்டு, விளக்கொளி பெருமாள் கோவிலுக்கு சென்று, சனிக்கிழமை அதிகாலை, 4:00 மணியளவில், வரதராஜ பெருமாள் கோவிலை சென்றடைவார்.அய்யங்கார் குளம் பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தரை கிணறு அதாவது நடவாவி என்று அழைக்கப்படும் கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வது அப்பகுதியில் பெரிய விழாவாக இருந்து வருகிறது.

அந்த கிணற்றில் வியக்க தக்க வகையில் உள்ளே மண்டபங்கள் கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை சுற்றி பிரகாரம், சுவாமி எழுந்தருள்வதற்காக தனி அறை அமைக்கப்பட்டுள்ளது,மற்ற நாட்களில் அந்த கிணற்றில் உள் மண்டபம் தண்ணீரில் மூழ்கி இருக்கும் திருவிழாவிற்காக தண்ணீரை வெளியேற்றி மண்டபத்தை அப்பகுதிவாசிகள் சுத்தம் செய்வர்.மேலும், சித்திரை மாதம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும். தண்ணீர் இருக்கும் கிணற்றில் உள் பகுதியில் குளுமையாக இருக்கும் என்பதால் வெப்பத்தை தணிக்க அந்த நடவாவி கிணற்றில் இறங்கி ஓய்வு எடுத்து பின் பெருமாள் செல்வதாக கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: தமிழக கிரிக்கெட் அணி வீரர்கள் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar