Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போடி பரமசிவன் கோயில் சித்திரை ... திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் வசந்தோற்சவ விழா! திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
12:04

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று காப்புக்கட்டுடன் துவங்கியது. ஏப்., 21 ல் நள்ளிரவு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக நேற்று காலை 7.45 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், யாகமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் காப்பு கட்டப்பட்டது.பின்னர் தீர்த்தகுடங்கள் புறப்பாடாகி யாகசாலையை அடைந்தது. இரவு பெருமாள் ஆடி வீதியில் வலம் வந்தார். யாகசாலை முன் அர்ச்சகர்களின் வேத கோஷம் முழங்க சிறப்பு தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து ஏப்.,21 காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்தக் குடங்கள் புறப்பாடாகி பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அன்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் தீ வெட்டி வெளிச்சத்தில், பெருமாள் ‘கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் அலங்கார கோலத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார்.  மறுநாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளும் அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து ஏப்.,23 ம் தேதி இரவு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து தசாவதாரமும், மறுநாள் கருடசேவையும், ஏப்.,26 ம் தேதி பெருமாள் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் கோயிலை அடைவார்.  ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar