Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை அருகே நிலத்தடியில் விண்ணக ... பழநி மலைக்கோயில் விநாயகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சி மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோவில் ராட்ஷத கொழுக்கட்டை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
11:08

திருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ ராட்ஷத கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி முடிந்த நான்காம் நாளன்று வரும் சதுர்த்தி திதியை விநாயகருக்கு உகந்த நாளாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. பௌர்ணமி முடிந்து நான்காவது நாள் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக, மாதந்தோறும் விநாயகருக்கு பக்தர்கள் விரதமிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழிந்த நான்காம் நாளன்று வரும் சதுர்த்தி, மஹா விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. புராண காலத்தில், கஜமுகாசுரன் என்ற அசுரன் கடுந்தவம் இருந்து, மனிதர், விலங்கு, தேவர், ஆண், பெண், ஆயுதங்களால் கொல்லமுடியாத வரத்தை சிவனிடம் பெற்றான். அசுரகுல வழக்கப்படி வரத்தை பெற்ற உடன், தேவர், முனிவர், மக்களை துன்புறுத்தினான். அதனை வதம் செய்ய விநாயகர் அவதாரமெடுத்தார். அவரை, ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று, யானை முகத்தோடும், மனித உடலோடும் சிவன் தோற்றுவித்தார். விநாயகர் தனது தந்தங்களில் ஒன்றை ஒடித்து, கஜமுகாசுரனை வென்று, மூஞ்சுறாக மாறிய அவன் மீதேறி அமர்ந்து, அவனை தனது வாகனமாக அருள்பாலித்தார். விநாயகரின் அவதாரத்திருநாளான சதுர்த்தியையொட்டி, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்கவிநாயகர் கோவிலில் சதுர்த்திப்பெருவிழா, நாளை (செப்., 1ம் தேதி) துவங்குகிறது. செப்., 1ம் தேதி, பாலகணபதி அலங்காரத்தில் அருள்பாலிக்கவிருக்கும் விநாயகருக்கு, 150 கிலோ எடையுள்ள ராட்ஷத கொழுக்கட்டை நெய்வேத்யம் செய்யப்படுகிறது. நெய்வேத்யம் செய்யப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து செப்., 14ம் தேதி வரை நடக்கும் விழாவில், விநாயகருக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர் சித்ரா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி இன்று காலை திருமலையில் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்:  பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து ... மேலும்
 
temple news
ஆர்.கே.பேட்டை: கிருத்திகையை ஒட்டி நேற்று, முருகர் மலைக்கோவில்களில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar