முத்துமாரியம்மன் கோவிலில் 22ம் தேதி செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2016 01:04
மங்கலம்பேட்டை: கட்டியநல்லுார் முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 22ம் தேதி நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த கட்டியநல்லுார் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதன, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. நாளை மறுநாள் (22ம் தேதி) காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, மாலை 4:00 மணியளவில் செடல் திருவிழா நடக்கிறது.