Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி விழா 108 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2011
11:09

திருநெல்வேலி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேவா பாரதி தொண்டு நிறுவன நல அமைப்பு சார்பில் 5அடி உயர சிலை உட்பட மொத்தம் 108 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. மேலப்பாளையம், குறிச்சி பிள்ளையார் கோயில் தெரு சந்தி விநாயகர் கோயிலில் சேவா பாரதி தொண்டு நிறுவன நல அமைப்பு சார்பில் கடந்த 31ம்தேதி இரவு 5அடி உயர விநாயகர் சிலை உட்பட மொத்தம் 108 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் 107 சிறிய சிலைகளை பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். விநாயகர் சதுர்த்தியான நேற்று காலை சந்தி விநாயகர் மூலவருக்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 அடி உயர விநாயகருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 3.30 மணிக்கு 5 அடி உயர விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது. இதில் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கிசென்று வீடுகளில் வழிபட்டவர்களும் சிலைகளை ஊர்வலத்தில் எடுத்து வந்தனர். மொத்தம் 108 விநாயகர் சிலைகளும் தாரை, தப்பட்டை முழங்க விஜர்சன ஊர்வலம் மேலப்பாளையம், குறிச்சி, குருநாதபுரம், நாகம்மாள்புரம் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றிருக்கு எடுத்து வரப்பட்டது. ஆற்றங்கரையில் 108 விநாயகர் சிலைகளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதனையடுத்து சேவா பாரதி கணேசன் தலைமையில் பக்தர்கள் 5 அடி உயர விநாயகர் சிலை உட்பட 108 சிலைகளையும் விஜர்சனம் செய்து வழிபட்டனர். விஜர்சன ஊர்வலத்தை முன்னிட்டு பாளை., இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீபெரும்புதுார்; மார்கழி மாத செவ்வாய் கிழமையான இன்று சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகளால் ... மேலும்
 
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் இன்று டிச.,23ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. இதனை ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar