பதிவு செய்த நாள்
05
மே
2016
12:05
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழா மே 12ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று காலை உற்சவர், தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்படும். அன்று முதல் மே 20 வரை இரவு 7.00 மணிக்கு சுவாமி, தெய்வானைக்கு பூ அலங்காரமாகி வசந்த மண்டபத்தில்எழுந்தருளி வசந்த உற்சவம் நடக்கும். பால்குடம்: மே 21 அதிகாலை சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் கொண்டுவரும் பால், குடம் குடமாக சுவாமிக்கு மதியம் 2.00 மணி வரை அபிஷேகம் செய்யப்படும். மே 22ல் தங்க குதிரை வாகனம், சட்டத்தேரில் சுவாமி, தெய்வானை புறப்பாடாகி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயில் சென்றடைவர்.