பதிவு செய்த நாள்
05
மே
2016
01:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. மாதம் இரு முறை வரும் பிரதோஷ நாளில், மாலை, 4:30-6:00 மணியளவில், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பிரதோஷ தினமான நேற்று, பொள்ளாச்சி சுப்பிரமணியர் கோவில், ஐயப்பன் கோவில், ஜோதி நகர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், தேவம்பாடி வலசு அம்மணீஸ்வரர் கோவில், கப்பளாங்கரை பரமசிவன் கோவில், பட்டணம் சிவன் கோவில், தேவனாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் , சிறப்பு வழிபாடு நடத்தினர். சிவன், அம்மன் மற்றும் நந்திக்கு அபிேஷக ஆராதனைகளும், திருவீதியுலா, அலங்கார பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.