Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தீபாவளியன்று ஏழுமலையானை தரிசிக்க 4 ... பொம்மையாபாளையம் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக அர்ப்பணிக்கப்பட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2011
11:09

புதுச்சேரி : புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அர்ப்பணிப்பு விழா நேற்று நடந்தது. தூய இருதய ஆண்டவர் ஆலயம் பசிலிக்காவாக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான முறையான அறிவிப்பு மற்றும் அர்ப்பணிப்பு விழா நேற்று மாலை நடந்தது. நேற்று காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் யுவான் ஆம்புரோஸ், பகல் 12 மணிக்கு முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின், மாலை 5.30 மணிக்கு திண்டிவனம் நடுநிலைய இயக்குனர் அல்போன்ஸ் அடிகளார் ஆகியோர் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றினர். முன்னதாக நேற்று காலை திருப்பலிக்கு முன் மூன்று நாள் விழாவிற்கான கொடியேற்றப்பட்டு பகல் 11 மணிக்கு மிஷன் அச்சக மேலாளர் அருட்பணி மரிய ஜோசப் நற்கருணை ஆராதனை நடத்தினர்.இரவு 7 மணிக்கு பசிலிக்கா அதிபர் தாமஸ் அடிகள், அருட்பணி உதவியாளர் லூர்துசாமி, பொறிஞர் சார்லஸ் கோலன், வின்சென்ட்ராயர், நாதன், கிலோன் ஆகியோர் பேராயர் இல்லத்திலிருந்து போப்பாண்டவரின் இந்தியத் தூதர் சால்வாத்தோரே பெனாக்கியோவை பவனியாக அழைத்து வந்தனர். அப்போது பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. கோவில் வளாகத்தில் நுழைந்தவுடன் முறைப்படி அறிவிப்பதற்கான ஆவணத்தை லத்தீனில் வாசிக்க பேராயர் ஆங்கிலத்தில் வாசிக்க முறைப்படியான அறிவிப்பும், அர்ப்பணமும் நடந்தது.இதனையடுத்து அனைவரையும் தூயநீரால் புனிதப்படுத்தினர். பின் அமலோற்பவம் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வரவேற்பு விழாவில் அன்பழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். விழா நினைவாக பசிலிக்கா பற்றிய சிறு வழிகாட்டுதல், நூலை இந்தியத் தூதர் வெளியிட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் பெற்றுக் கொண்டார். பசிலிக்கா பெயர்ப்பலகை, புதிய வெப்சைட் வெளியிடப்பட்டன. பேரவைத் துணைத் தலைவர் வின்சென்ட் ராயர் நன்றி கூறினார். இன்று (3ம் தேதி) இந்தியத் தபால்துறை உயர் செயலர் ராதிகா துரைசாமி சிறப்புத் தபால் உறையை வெளியிடுகிறார். நாளை (4ம் தேதி) மாலை 7.15 மணிக்கு புதுச்சேரி கவர்னர், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் பசிலிக்கா நினைவு மலர் வெளியிடப்படுகிறது. விழாவில் புதுச்சேரி கடலூர் மறைமாவட்ட பங்குத் தந்தைகள், நிர்வாகிகள், கிறிஸ்துவ மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நல்லவை யாவும் நடக்கும் சிறந்த நாள் இன்று. பெருமாளை வழிபடுவதற்கு சிறந்த நாள் திருவோணம். பெருமாளின் ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: மாடூர் டோல்கேட் அருகே நிறைமதி சாலையில் உள்ள பஞ்சமுக மஞ்சள் வாராஹி அம்மன் கோவிலில், ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவிலில் முதலாமாண்டு பூர்த்தி சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar