Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டுத்திருவிழாவில் பங்கேற்க ... திருப்பதியில் புதிய சேர்மன், அறங்காவலர் குழு பதவியேற்பு திருப்பதியில் புதிய சேர்மன், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் திருமுறை பாடல் கல்வெட்டு திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2011
10:09

குறிஞ்சிப்பாடி:குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரியில் உள்ள சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில், சுந்தரர் பாடிய திருமுறைக் கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரியில் உள்ள சிவக்கொழுந்தீசுவரர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இக்கோவிலில், சுந்தரர் வந்து தங்கி, "நீறு தாங்கிய திருநுதலானை என தொடங்கும் பாடலைப் பாடியுள்ளார். இந்தத் திருமுறைப் பாடல், இது வரை ஓலைச் சுவடியில் மட்டுமே இருந்து வந்தது. இப்பாடலின் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.கல்வெட்டை திருவாவடுதுறை ஆதீனம், 23வது குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார்.முன்னதாக, மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தினை நிவேதனம் நடந்தது. இதைத் தொடர்ந்து, மூவர் தேவாரம் புத்தகத்தை திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட, அதை ஏகாம்பரம் சரசு பெற்றுக் கொண்டார். இத்தலத்தில், நீண்ட காலமாக நிவேதனம் நடைபெறாமல் இருந்து வந்தது. வரும் 11ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், 11ம் தேதி முதல் அன்னதானம் வழங்கப்பட உள்ளது, சிவக்கொழுந்தீசுவரர் கோவில் தல வரலாற்றை, 1,000 பக்கங்கள் கொண்ட புத்தகமாகத் தயாரித்து வருகிறோம். விரைவில் வெளியிடப்படும் என, ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar