Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் வைகாசி விசாக விழா கோலாகலம்: ... ஹரே ராமா கோஷம் முழங்க திருப்புல்லாணியில் தேரோட்டம்! ஹரே ராமா கோஷம் முழங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்!
எழுத்தின் அளவு:
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

பதிவு செய்த நாள்

21 மே
2016
10:05

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாடல் பெற்ற ஸ்தலமான கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்  தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை மற்றும் மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது. அதில் கடந்த 16ம் தேதி இரவு தெரு வடைச்சானிலும், 17ம் தேதி வெள்ளிரதத்தில் வீதியுலாவும், 18ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேர் திரு விழா நேற்று நடைபெற்றது. அதனையொட்டி காலை 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்தி அலங்காரம், தீபாராதனையைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவில் முன்மண்டபத்தில் எழுந்தருளிய தும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளம், பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி தேரடிக்கு வந்து, அலங்கரித்த தேரில் எழுந்தருளினார். ய õத்ராதானம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்  முக்கிய வீதிகள் வழியாக பகல் 1:00 மணிக்கு மீண்டும் தேரடியை வந்தடைந்தது. மாலை சுவாமி தேரிலிருந்து இறங்கி, திருஞானசம்பந்தர்  சன்னதியில் மண்டகபடி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி கோவிலை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து நடராஜர், சி வகாமசுந்தரி தேரடிக்கு எழுந்தருளி தேரை தகனம் செய்யும் ஐதீக உற்சவம் நடைபெற்றது.  இன்று இரவு முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar