பண்ருட்டி: திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில் பெருமாள், கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாதி நட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருடவாகனத்தில் அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து, 7:00 மணிக்கு, திருவதிகை வீரட்டானேஸ்வரர் ÷ காவிலில், பெருமாள், திரிபுரசம்ஹாரமூர்த்திக்கு (சிவபெருமானுக்கு) சரம் (அம்பு) தருதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர் கள் சுவாமியை வழிபட்டனர்.