Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழை மக்களின் வசதிக்காக திவ்ய ... சந்திரபிரபை அலங்காரத்தில் வைகுண்டவாச பெருமாள் அருள்பாலிப்பு! சந்திரபிரபை அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளத்தில் புதைந்து கிடந்த சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
குளத்தில் புதைந்து கிடந்த சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

பதிவு செய்த நாள்

23 மே
2016
11:05

கேசம்பள்ளி: கேசம்பள்ளி அருகே உள்ள ராகவய்யா குளத்தில் சோழர் காலத்தை சேர்ந்த, மூன்று பஞ்சலோக சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. கே.ஜி.எப்., புறநகர் பகுதியில் உள்ள கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட ராகவய்யா குளத்தில், மழைநீர், கழிவுநீர் தேங்கியது. கோடை வெயிலின் தாக்கத்தால், இக்குளத்தின் தென் மேற்கு பகுதியில் நீர் வற்ற துவங்கியது. நீரின் அளவு குறைந்து வந்ததால், அப்பகுதியினர் அந்த நீரை குடங்களில் எடுத்து சென்று பயன்படுத்தினர். இந்நிலையில், குளத்தை அழகுபடுத்தவும், துார்வாரவும் கோலார் கலெக்டர் திரிலோக்சந்தர் உத்தரவின் பேரில், மழைநீர் சேகரிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டது. டேங்கர் லாரிகள் மூலம் குளத்தில் நீர் நிரப்பும்போது, குளத்தில் சிலை ஒன்று புதைந்து கிடந்ததை, டிரைவர் சீனிவாச ரெட்டி கண்டார். சிலரின் உதவியுடன், கலைநயம் மிக்க நரசிம்ம சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. மேலும், சிலைகள் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், குளம் முழுவதும் தேடும் பணி நடைபெற்றது. இதில், லட்சுமி, விஷ்ணு சிலைகளும் கிடைத்தன. ஒரு அடி உயரம் கொண்ட மூன்று சுவாமி சிலைகள் கிடைத்த தகவல், கிராமப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த பேத்தமங்களா போலீசாரும் விசாரித்தனர். மூன்று சிலைகளும் பஞ்சலோக சிலைகள் என்றும், சோழர் காலத்துக்கு உட்பட்டவை என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த சிலைகளை பெரிய கோவில்களிலிருந்து யாரோ திருடி வந்து, ஏரியில் வீசியிருக்கலாம் என, அப்பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவர் ஒருவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar