நெய்வேலி: நெய்வேலியில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் வரும் ஜூன் 2ம் தேதி சமஷ்டி உபநயனம் நடைபெற உள்ளது. பதிவு செய்யப்பட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நெய்வேலி கிளை சார்பில் வரும் ஜூன் 2ம் தேதி நெய்வேலி நகரம் வட்டம் 2ல் உள்ள சங்கரா ஹாலில் பிராமண சிறார்களுக்கு சமஷ்டி உபநயனம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வடுக்களைச் சேர்க்க விரும்புபவர்கள் 94432 09226 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை சங்கத்தின் நகர தலைவர் நாராயண சாஸ்திரிகள் தெரிவித்துள்ளார்.