Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாசாந்த காளியம்மன் கோவில் வைகாசி ... திருத்தணி கோவில் குடில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோளிங்கர் மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் இழுபறி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2016
12:05

சோளிங்கர்: சோளிங்கர் மலைக்கோவிலுக்கு, ரோப்கார் அமைக்கும் திட்டத்தில் இழுபறி நிலவுவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆழ்வார்களால் பாடல்பெற்ற தொண்டை மண்டல வைணவ திருத்தலங்களில், வேலூர் மாவட்டம், சோளிங்கர் யோகநரசிம்ம சுவாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என, நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் செங்குத்தான மலை மீது உள்ளதால், 1,700 படிகட்டுக்களை கடந்து சென்று தான், சுவாமியை தரிசிக்க முடியும். அத்துடன் இந்த மலைக்கு எதிரில், 700 படிகட்டுக்களுடன் உள்ள சிறிய மலையான யோக ஆஞ்சநேயர் கோவிலையும் தரிசித்தால் தான் முழு பயன் கிடைக்கும். இதனால் வயதான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கோவிலுக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். வசதியானவர்கள் டோலி மூலம் மலைக்குச் சென்று, சுவாமியை தரிசனம் செய்து விட்டு வருகின்றனர். இதனால், மலை கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில், ரோப்கார் அமைக்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணி நடந்து வந்தது. ரோப்கார் அமைக்க, இரண்டு கி.மீ., தூரத்துக்கு சாலையும் போடப்பட்டது. ஆனால், பல்வேறு தொழில் நுட்ப காரணங்களினால் ரோப் கார் அமைக்கும் பணி தடைபட்டது. கடந்த, 2014 டிசம்பர் மாதம் முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியில், ஒன்பது கோடி ரூபாய் மதிப்பில் மீண்டும் ரோப்கார் அமைக்கும் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கான டெண்டர் இது வரை விடப்படவில்லை. இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறுகையில்,அரசின் ஒப்புதல் கிடைக்காததால் டெண்டர் விடப்படவில்லை. பெங்களூரைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுக்க முயற்சித்தது. கமிஷன் பிரச்னையால், டெண்டர் எடுக்க அவர்களால் முடியவில்லை, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar