Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் ... பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் பாடலீஸ்வரர் கோவிலில் தெப்பல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் 300 ஆண்டாக தொடரும் சம்பிரதாயம்!
எழுத்தின் அளவு:
ஆண்கள் மட்டுமே வழிபடும் கோவில் 300 ஆண்டாக தொடரும் சம்பிரதாயம்!

பதிவு செய்த நாள்

24 மே
2016
10:05

வாழப்பாடி: வாழப்பாடியில், ஆண்கள் மட்டும் வழிபடும், 300 ஆண்டுகள் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவிலில், விடுமுறை நாளில், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து, 3 கி.மீ., துாரத்தில், கொட்டிப்பள்ளம் ஓடை அருகே, சிங்கிபுரம் காலனி வனப்பகுதியில், 300 ஆண்டுகள் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் உள்ளது. அங்கு, மூலவருக்கு வடதிசையில், சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய, ராட்சத சுவாமி சிலைகள் காணப்படுகின்றன.ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப் பகுதியில் கோவில் உள்ளது. இரவில் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள் தங்கி, சக்தி திரட்டுவதால், முனி உலவுவதாக நம்பிக்கை கொண்டு, அங்கு பெண்கள் செல்ல முன்னோர்கள் தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால், 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலில், ஆண்களே பொங்கல் வைத்து, சுவாமிக்கு படைக்கின்றனர். நேர்த்திக்கடனாக, கிடா, கோழி பலியிட்டு, கோவில் வளாகத்திலேயே சமைத்து சாப்பிடுகின்றனர். அந்த பொங்கல், கறியை, பெண்கள் சாப்பிடக்கூடாது என்பதால், ஆண்கள் வீட்டிற்கும் எடுத்து செல்வதில்லை. இந்த கோவில் விபூதியை கூட, பெண்கள் வைப்பது கிடையாது. இந்த கோவிலில், விடுமுறை நாளில், பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் குவிகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்; கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு காலைஸ்ரீஅம்பாள் அபிஷேகம் அதனைத் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி தசரா நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆயுத பூஜை  ... மேலும்
 
temple news
எரியோடு; எரியோடு அருகே இ.சித்தூர் நல்லமநாயக்கன்பட்டியில் இருக்கும் அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் ... மேலும்
 
temple news
மேலூர்; வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் பெண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar