உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பண்ணைப்பட்டி சின்னாக்கம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் மே 22 ம் தேதி துவங்கியது. நேற்று காலை 9.10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. புத்துார் முருகன் கோயில் அர்ச்சகர் ராம்குமார் தலைமையில் பூஜை நடந்தன. அன்னதானம் நடந்தது.