சோழவந்தான்: சோழவந்தான் நாடார் தெரு பத்ரகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. சிவாச்சார்யார் கண்ணன் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக, ஆராதனைகளை செய்தார். சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் முருகேசன், செயலாளர் ஜவஹர், பொருளாளர் சண்முகராஜா, துணைத் தலைவர் அண்ணாமுருகன், துணை செயலாளர் குணசேகரன் செய்து இருந்தனர்.