பதிவு செய்த நாள்
28
மே
2016
11:05
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. சென்னிமலை முருகன் கோவிலில், ஏழு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். இதன்படி உண்டியல்கள், நேற்று திறந்து எண்ணப்பட்டன. இதில், 26 லட்சத்து, 82 ஆயிரத்து, 532 ரூபாய் ரொக்கம் இருந்தது. மேலும், தங்கம், 82.10 கிராம், 8,762 கிராம் வெள்ளி காசு, நகைகளும் காணிக்கைகளாக செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணி, பண்ணாரி கோவில் துணை ஆணையர் மாரிமுத்து, தக்கார் முருகையா, ஆய்வாளர் ஜெயமணி, கோவில் செயல் அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலையில் நடந்தது.