திருவண்ணாமலை கும்பாபிஷேக திருப்பணி குறித்த ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2016 11:05
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணியை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம், கடந்த, 2002ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, கடந்த ஆண்டு ஜன., 26ம் தேதி பாலாலயத்துடன் திருப்பணி துவங்கியது. இந்த ஆண்டிற்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளதால், திருப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், உபயதாரர்கள், ஸ்தபதிகளுடன், இணை ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கோவிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகளின் முன்னேற்றம், பணிகளை விரைந்து முடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.