விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த வி.புதுப்பாளையம் ஆலடி விநாயகர் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. வி.புதுப்பாளையம் ஆலடி விநாயகர் கோவி லில் உள்ள கெங்கையம்மன் சுவாமிக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை, கரகம் வீதியுலா நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலம், பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு 7:00 மணிக்கு பூங்கரகம் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இன்றும், நாளையும் மேடை நாடகமும், 30ம் தேதி காலை கரக ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.