பதிவு செய்த நாள்
28
மே
2016
05:05
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவிலில், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக காலை 10 மணியளவில் மாவட்ட எல்லையான அழகாபுரியில் அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். வழிவிடு முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நத்தம்பட்டி, கிருஷ்ணன்கோவில், ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் வரவேற்பளித்தனர், 11 மணியளவில் கோவிலுக்கு வந்த அமைச்சருக்கு, தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜ், ஸ்தானிகம் ரமேஷ் ஆகியோர் கோவில் மரியாதை செய்து வரவேற்றனர், ஆண்டாள் சன்னிதியில் சுமார் 20 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். உடன் ஸ்ரீவி,எம்.எல்.ஏ. சந்திரபிரபா, சாத்தூர் எம்,எல்.ஏ சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மல்லி துரைபாண்டியன்,தொகுதி செயலர் பாலசுப்பிரமணியன், நகரசெயலர் முத்துராஜ், ஒன்றிய செயலர் மயில்சாமி, மாவட்ட கவுன்சிலர் முத்தையா,நகராட்சி கவுன்சிலர்கள் அங்குராஜ், மீராதனலட்சுமி முருகன், பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.