Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹரிஹர புத்திர அய்யனார் கோயிலில் ... பச்சைவாழியம்மன் கோவில் மகா நட்சத்திர வேள்வி யாகம்! பச்சைவாழியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் குளம் மூடல்: பக்தர்கள் தவிப்பு!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் குளம் மூடல்: பக்தர்கள் தவிப்பு!

பதிவு செய்த நாள்

31 மே
2016
11:05

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் சரவணபொய்கை குளத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டியதால், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கையில் பக்தர்கள் புனித நீராடிய பின், மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை தரிசிப்பர்.கிருத்திகை, ஆடிக்கிருத்திகை ஆகிய நாட்களில் காவடிகள் எடுத்துவரும் பக்தர்கள், சரவணபொய்கையில் நீராடி, காவடிகளை கழுவி பூஜை செய்த பின், மலைக் கோவிலுக்கு சென்று காவடிகள் செலுத்துவர்.

மொட்டை அடிக்கும் பக்தர்கள், குளத்தில் குளித்த பின், மலைக்கோவிலுக்கு சென்று நேர்த்திக் கடனை தீர்ப்பர். சிறப்பு வாய்ந்த சரவணபொய்கையை இரு மாதங்களுக்கு முன், முன் அறிவிப்பு இல்லாமல் கோவில் நிர்வாகம், குளத்தின் ஏழு கதவுகளையும் பூட்டியது. இதனால், காவடிகள், மொட்டை அடிக்கும் பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். மாதம்தோறும் கிருத்திகைக்கு, நாங்கள் குடும்பத்துடன் முருகன் கோவிலுக்கு வந்து தரிசிப்போம். முன்னதாக, திருக்குளத்தில் புனித நீராடிய பின்னர் தான், படிகள் வழியாக நடந்து செல்வோம். திருக்குளம் பூட்டப்பட்டதால், புனித நீராட முடியவில்லை. ஆர்.செல்லம்மாள், கே.கே., நகர், சென்னை.

பக்தர்கள் குளத்தில் குளிக்கும்போது, இறப்பு ஏற்படுவதை தடுக்க, கோவில் குளத்தில் யாரும் இறங்காத வண்ணம், சுற்றுச்சுவர் அமைத்து, கதவுகளுக்கு பூட்டு போட்டு பூட்ட வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆகையால் தான் திருக்குளம் பூட்டப்பட்டது.பழனி, மேலாளர், திருக்கோவில், திருத்தணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தென்காசி; ஐப்பசி விசு திருவிழாவை முன்னிட்டு திருக்குற்றாலநாதர் கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி ... மேலும்
 
temple news
திருப்பரங்கன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு ... மேலும்
 
temple news
ஆந்திரா;  நந்தியாலில் உள்ள ஸ்ரீசைலம் ஸ்ரீ பிரமராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கன மழையால் உத்தரகோசமங்கை ... மேலும்
 
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar