Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காலடியில் கல்விக்கான யாகம்! கோயில்களில் ஆடு, கோழி வெட்ட தடை?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் அன்னதானம் கிடைக்குமா? பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 செப்
2011
11:09

சபரிமலை: சபரிமலையில், அன்னதானத் திட்டம் செயல்பட்டு வந்த கட்டடத்தை, தன் வசப்படுத்த, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முடிவு செய்துள்ளதால், இனிமேல், சபரிமலையில் அன்னதானம் கிடைக்குமா என்பது, பக்தர்களிடம் கேள்விக்குறியாகி விட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில், பிரசித்திப் பெற்ற, அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், கோடிக்கணக்கான பக்தர்கள், ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர். இங்கு அதிகளவில் செயல்பட்டு வந்த, ஓட்டல்களில் உணவின் தரம், அதிக விலை போன்ற பல்வேறு குறைபாடுகளால் பக்தர்கள் அவதிப்பட்டனர். அடர்த்தியான மலைப் பகுதி என்பதால், அங்கு தங்க வேண்டிய நிலையில் இருந்த ஏழை எளிய மக்களும் உணவின்றி சிரமப்பட்டனர். இக்குறைபாட்டை களைய, அதிக நன்கொடையாளர்கள் முன்வந்தும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க, போதுமான கட்டடம் இல்லாமல் இருந்தது. இதற்காக தேவஸ்வம்போர்டு வசம் இருந்த, கட்டடத்தை அய்யப்ப சேவா சங்கத்திற்கு வழங்கியது. அக்கட்டடத்தில் தான் மூன்றாண்டுகளாக, அன்னதானத் திட்டம் செயல்படுகிறது. இத்திட்டத்தினால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி உணவருந்தி வருகின்றனர். பலருக்கும் தங்குவதற்கு, இலவச இட வசதியும் கிடைத்தது. மேலும், அன்னதானத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சபரிமலையில் தனியார் ஓட்டல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்நிலையில், அக்கட்டடத்தை திருப்பித் தருமாறு தேவஸ்வம்போர்டு, அய்யப்ப சேவா சங்கத்திடம் கூறியுள்ளது. அங்கு பக்தர்கள் ஓய்வெடுக்கும் வளாகம் மற்றும் அரவணா வினியோகத்திற்கான, ப்ரீ பெய்டு கவுன்டர்கள் அமைக்க, தேவஸ்வம் போர்டு உத்தேசித்துள்ளதாக, கூறப்படுகிறது. இக்கட்டடத்தை திருப்பியளித்து விட்டால், அய்யப்ப சேவா சங்கத்தினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு, திட்டம் என்னவாகுமோ என்ற கேள்வி, பக்தர்களிடம் எழும்பியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar