கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2016 12:05
சேலம்: கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. நடப்பு ஆண்டு வைகாசியில், 5 திங்கள் உள்ளது. அதில், மூன்றாவது திங்களான நேற்று, கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுவாமிக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை, 6 மணிக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கி, வெற்றிலை மாலை சாத்தப்பட்டது. மாலை வரை, சிறப்பு பூஜை தொடர்ந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.