Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தி எதிரொலி: திருத்தணி ... நகரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு ஹோமம் நகரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
செஞ்சிக் கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
10:06

செஞ்சி: செஞ்சிக் கோட்டை யில் உள்ள,  கமலக்கன்னியம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி, தேர் திருவிழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை ராஜகிரி மலை மீது கமலக்கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோ வில் திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில், தினமும், கமலக்கன்னியம்மன், ராஜகாளியம்மன், மாரியம்மனுக்கு  பொங்கல் வைத்து படையல், சிறப்பு அபிஷேகம்,  வீதியுலா நடந்து வந்தது. ஒன்பதாம் நாள் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. காலையில், மாரியம்மனுக்கு, 108 பால் குடம் எடுத்து அபிஷேகமும்,  மாலையில், கோட்டையில் உள்ள ராஜகாளியம்மனுக்கு பொங் கல் வைத்து, பாரம்பரிய பூஜைகளும் நடந்தது. அப்போது, கோட்டை யிலும், மந்தைவெளியி லும் எருமைக் கிடாக்கள் பலியிடப்பட்டது.  தொடர்ந்து, 41 அடி உயரத்தில், 70 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக செய்யப்பட்ட தேரில் மாரியம்மன், கமலக்கன்னியம்மன், திரிசூலம் பவனி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர். அப்போது, தானியம், காய்கறி, நாணயம் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் ஏழுமலை மற்றும் உபயதாரர்கள், பீரங்கிமேடு பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு, செஞ்சிக் கோட்டைக்கு பொதுமக்கள் சென்று வருவதற்கு, இந்திய தொல்லியல் துறையினர், இலவச அனுமதி வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த வைபவத்தில் அதிகாலையில் ... மேலும்
 
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar