பதிவு செய்த நாள்
01
ஜூன்
2016
11:06
திருப்பதி,: காளஹஸ்தி கோவிலில், இடைத்தரகர்களின் தொல்லை அதிகரித்து வருவதாக, பக்தர்கள், புகார் அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள, காளஹஸ்தீஸ்வரர் கோவில், ராகு - கேது பரிகார தலமாக உள்ளதால், உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும், பல பக்தர்கள் இங்கு வருகின்றனர். தேவஸ்தானம், 300 ரூபாய் விரைவு தரிசனம், 50 ரூபாய் தரிசனம் மற்றும் தர்ம தரிசனத்திற்கும் ஏற்பாடுகளை செய்துள்ளது. கோடை விடுமுறை முடிவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த, இரண்டு நாட்களில், 50 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள், தரிசனத்திற்கு குவிந்தனர். கூட்டம் அதிகரித்ததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இடைத்தரகர்கள், பணம் பெற்றுக்கொண்டு, குறுக்கு வழியில் பக்தர்களை அனுப்பினர். கோவில் ஊழியர்களும், இதற்கு உடந்தையாக இருந்தனர். பல மணி நேரம் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்கள், ஆத்திரத்துடன், கோவில் நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.