சிறுபாக்கம்: பொயனப்பாடி ஆண்டவர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி ஆண்டவர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 20ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி, 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை பகல் 1:00 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 9:00 மணிக்கு சுவாமி வீடியுலா நடந்தது. தேர்திருவிழாவையொட்டி 27ம் தேதி காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மாலை 4:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.