திருத்தணி: திருத்தணி ஒன்றியம், கோரமங்கலம், கிருஷ்ணசமுத்திரம் மற்றும் மேல்முருக்கம்பட்டு ஆகிய கிராமங்களில், நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. இதையொட்டி, காலை, 8:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு, 7:00 மணிக்கு, களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பூகரகத்துடன் கங்கையம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.