ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2016 11:06
விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ நிறைவையொட்டி, விடையாற்றி உற்சவம் நடந்தது. விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி துவ ங்கியது. தினசரி காலை பெருமாள் பல்லக்கில் வீதியுலா, திருமஞ்சனம், சேவா காலம், சாத்துமறை நிகழ்ச்சிகளும், இரவு அலங்கரித்த வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வாக 27ம் தேதி தேரோட்டம் நடந்தது. பிரம்மோற்சவ நிறைவையொட்டி விடையாற்றி உற்சவம் நடந்தது. காலை ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமறை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் சமேத ÷ காலத்தில் பெரு மாள் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.