பதிவு செய்த நாள்
02
ஜூன்
2016
11:06
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, சச்சின் டெண்டுல்கர், அவர் மனைவி அஞ்சலி, நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, சினிமா தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த், நிம்மகட்ட பிரசாத் உள்ளிட்டோர், நேற்று காலை, வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் வழிபட்டனர். இதற்காக, அவர்கள், நேற்று முன்தினம் இரவு, தனி விமானம் மூலம், திருப்பதிக்கு வந்து, அதன் பின், கார் மூலம், திருமலைக்கு வந்தனர். அவர்களை, தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். தரிசனம் முடித்து திரும்பிய சச்சின், சிரஞ்சீவிக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.