Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோவிலில் கற்தூண்களை ... பாதுகாப்பற்ற நிலையில் காளாத்தீஸ்வரர் தேர்! பாதுகாப்பற்ற நிலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: ஓண விருந்து துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 செப்
2011
11:09

சபரிமலை: ஓணம் பண்டிகையை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நான்கு நாட்கள் நடைபெறும் ஓண விருந்து, நேற்று துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்திப் பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஓணம் பண்டிகைக்காக, நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு, மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறந்தார். நேற்று அதிகாலை வழக்கம் போல், கணபதி ஹோமத்துடன், பூஜைகள் துவங்கின. நேற்று, ஓணம் பண்டிகையின் முதல்நாள், உத்திராட விருந்து நடந்தது. விருந்து நிகழ்ச்சி, சபரிமலை மேல்சாந்தி சசி நம்பூதிரி சார்பில் நடத்தப்பட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், நூற்றுக்கணக்கான பக்தர்கள் இதில், கலந்து கொண்டனர். இன்று டாக்டர் மணிகண்டன் சார்பில், 61வது ஆண்டாக, ஓணம் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (10ம் தேதி) பெங்களூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது சார்பில், அவிட்டம் நாள் ஓண விருந்தும், 11ம் தேதி திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு ஊழியர்கள் சார்பாக, பக்தர்களுக்கு சதய நாள் ஓண விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல், வரும் 11ம் தேதி வரை, அய்யப்பனுக்கு தினமும் சகஸ்ரகலசாபிஷேகமும், களபாபிஷேகமும் நடைபெறும். மேலும், சிறப்பு வேண்டுதலான உதயாஸ்தமனம் மற்றும் படி பூஜை ஆகியவையும் நடைபெறும். ஓணம் பண்டிகை நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, 11ம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். புரட்டாசி மாத பூஜைகளுக்காக, கோவில் நடை 16ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar