திருவாரூர் தியாராஜர் கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2016 05:06
திருவாரூர்: திருவாரூர் தியாராஜர் சுவாமி கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவில்.இக்கோவிலின் ஆழித்தேர் ஆசியாவியாவிலேயே பெரியது. இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் நாளை( ஜூன்16ல்) நடைபெறுகிறது. தேரோட்டத்தை ஒட்டி, தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் நேற்று இரவு தேருக்கு எழுந்தருளினார்.
தியாஜசுவாமியுடன், விநாயகர்,சுப்ரமணியர் சுவாமிகள் தனித்தனி தேருக்கு எழுந்தருளினர். இன்று( ஜூன்.15) காலை,6:45 மணிக்கு விநாயகர் தேர்; 7:00 மணிக்கு சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு,தெற்கு வீதி,மேலவீதி,வடக்கு வீதி வழியாக, காலை 10:00 மணிக்கு கீழவீதியை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, நாளை( ஜூன்16ல்) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.