மதுரை விளாச்சேரி ராமர் கோயிலில் பட்டாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2016 02:06
திருநகர்: மதுரை விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
ராமாயண நவாக பட்டாபிஷேக உற்சவ விழாவை முன்னிட்டு வால்மீகி ராமாயண பாராயணம் ஜூன் 8ல் துவங்கியது. ஜூன் 15 வரை காலை சமஸ்கிருதத்திலும், மாலை தமிழிலும் பாராயணம் நடைபெற்றது. 9ம் தேதி காலை திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமர் பட்டாபிஷேகம் இன்று(ஜூன் 16ல்) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. 8 பெண் குழந்தைகள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர் என்பது விழாவின் சிறப்பாகும். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.