திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூன் 2016 10:06
சிவகாசி: 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து முத்து பட்டர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலிக்கிறார். ஜூன் 24ல் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை தக்கார் சுவர்ணாம்மாள், செயல் அலுவலர் முருகன் செய்தனர்.