பதிவு செய்த நாள்
17
ஜூன்
2016
10:06
திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, குரு பகவானுக்கு, 108 லிட்டர் பால் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்கா நகர், யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ -- விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. மேலும், மணவாள நகரில் உள்ள மங்களீஸ்வரர் கோவிலில், உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.