சீரடி சாயிபாபா பிரார்த்தனை மண்டப கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2016 11:06
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாயிபாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 14ம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி காலை 8:00 மணிக்கு கொடியேற்றதுடன் துவங்கியது. 9:00 மணிக்கு ஷோடச கணபதி பூஜை, 1008 கணபதி ஹோமமும், மாலை 4:15 மணிக்கு கலச பிரதிஷ்டை, முதல் கால யாகவேள்வி நடந்தது. தொடர்ந்து, முக்கிய விழாவான இன்று 21ம் தேதி காலை 5:00 மணிக்கு காகட ஆரத்தி, 6:00 மணிக்கு சப்தகுரு பூஜை, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு, 9:30 மணிக்கு கலசாபிஷேகம், பகல் 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், தொடர்ந்து நாட்டியாஞ்சலி நடக்கிறது.