தொண்டி:தொண்டி அருகே புதுக்குடி சந்தன மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது. பக்தர்கள் காவடிகள் எடுத்து பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடந்தது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. திருத்தங்கல் கோயில் விழாவில் கருட சேவை சிவகாசி;திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி விழா நடந்து வருகிறது. 6 நாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கருட சேவை நடந்தது. இதில் ரங்கநாதார், நின்ற நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். செங்கமலத்தயார் அன்னம் வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கோபாலா கோவிந்தா என்ற கோஷத்தை உச்சரித்தப்படி சுவாமி தரிசனம் செய்தனர் ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், ஆனைக்குட்டம் நாராயண சுவாமி, முன்னாள் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். முத்து பட்டர் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரங்கள் செய்யப்பட்டன.