திருப்பரங்குன்றம்: உலக நன்மை, அமைதி, மழை மற்றும் உயிரினங்கள் சுபிட்சம் பெற வேண்டி மதுரை விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் 24 மணி நேர தொடர் ராமநாம ஜெபம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராமநாம ஜெபத்தை கூறினர். கோயில் நிர்வாகிகள் விஸ்வநாதன், கண்ணன், மரகதவல்லி ஆகியோர் சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.