நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பாளி, நான் நோன்பாளி (பிரச்னைக்கு வரவேண்டாம்) என்று கூறிவிடுங்கள்,”. நோன்பு என்றால் பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அது மட்டுமல்ல (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) “ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்,” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். இப்படி எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை இந்த மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்துாய்மையும், மனப்பக்குவமுமே இந்நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். நல்ல பண்புகளை நாமும் வளர்த்து பிறருக்கும் வலியுறுத்துவதே இன்றைய நமது சிந்தனை.
இன்று நோன்பு வைக்கும் நேரம்: மாலை 6.47 மணி நாளை நோன்பு திறக்கும் நேரம்: காலை 4.17 மணி.