சிதம்பரம்: சிதம்பரம் மேலமடம் அகோர சிவாச்சாரியார் சுவாமி திருமடத்திற்கு, 100 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற, மேலமடம் எனப்படும் அகோர சிவாச்சாரியார் சுவாமி திருமடம்,100 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் நடைபெற்று, மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழா, கடந்த 19ம் தேதி சபாநாயகர் கோவில் தீட்சிதர் நடராஜ தீட்சிதர் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று நான்காம் கால ய õகசாலை பூஜை நடைபெற்று, தீபாராதனை நடந்தது. காலை 10.௦௦ மணிக்கு கடம் புறப்பாடு செய்து, மேலமடம் கோவில் விமானத்திற்கு மகா கும்பா பிஷேகம் நடந்தது. தொடர்ந்து, துர்வாச முனிவர் சன்னதி, நடராஜர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஆயி ரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்து அறநிலையத் துறை கோவில் செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர்கள், கோவில் பணி யாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.