வாக்கூர் கலிவரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2016 11:06
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கலிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. வாக்கூர் கலிவரதராஜ பெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு, ராஜகோபுரம் புதியதாக கட்டி, கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 10:00 மணிக்கு, கலி வரதராஜ பெருமாள் கோவில் கோபுரம் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. வாக்கூர் சேஷாத்திரி, சாயிராம் மற்றும் சீனிவாச பட்டாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர், பூஜைகளை நடத்தினர். இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் பிரகாஷ் , ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.