நபிகள் நாயகம் ஒவ்வொரு பருவத்திலும் மக்கள் கடைபிடிக்க வேண்டியதை மிக அருமையாகச் சொல்கிறார். “இளைஞர்களே! உங்களின் பிள்ளைப்பருவம் கடந்து விட்டது. எனவே இறைவனுக்கு வழிபடுவதையும், நன்மையான செயல்களைச் செய்வதையும் இளமைப் பருவத்தில் தவறவிட்டால், பின்னர் எந்தக் காலத்தில் நீங்கள் அதனை ஈடுசெய்யப் போகின்றீர்? உங்களின் இளமை ஆட்டங்களில் மிக எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். இளமைப் பருவம் ஷைத்தான் வேட்டையாடும் தலமாகும். மண்ணறையில் இருந்து எழுப்பப்பட்டு கேள்வி கணக்கிற்காக இறைவன் முன் நிறுத்தப்படும் போது, ‘ஆ! என் இளமை விளைவித்த கேடே!’ என்று எத்தனையோ இளைஞர்கள் அழுது புலம்புவார்கள். ‘மானக்கேடே!’ என்று எத்தனையோ பெண்கள் கதறுவார்கள். ‘ஆ! முதுமையே’ என எத்தனையோ முதியோர்கள் தம்மை நொந்து கொள்வார்கள். இத்தகைய பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்த்து வாழ்வது அறிவுள்ளவர்களுக்கு படிப்பினையாகும்,” என்கிறார். ஆனால் இன்று இளைஞர்கள் நாகரிகம் என்ற போர்வையில் கேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இளமை காலத்தில் மார்க்கம் கற்றுத்தந்த பாதைக்குள் சென்றுவிட்டால், பின்னர் எக்காலமும் கவலை இல்லை. இளமையில் கடைபிடிக்கும் ஒழுக்கமே காலம் முழுவதும் நீடிக்கும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.