ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.49.23 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2016 12:06
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர, தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதில், 49 லட்சத்து 23 ஆயிரத்து 108 ரூபாய் வசூலாகியது. இக்கோவிலில், 16 நிரந்தர உண்டியல்கள், ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. திருப்பூர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி தலைமை வகித்தார். மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில், 16 நிரந்தர உண்டியல்களில், 36 லட்சத்து 49 ஆயிரத்து 211 ரூபாயும், ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்களில், 12 லட்சத்து 73 ஆயிரத்து 897 ரூபாயும் இருந்தது. 250 கிராம் தங்கமும்; ஒரு கிலோ 115 கிராம் வெள்ளியும் இருந்தது.