பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
12:06
விருத்தாசலம்: சங்கடஹர சதுர்த்தியொட்டி, விருத்தாசலம் விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகருக்கு நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அதே÷ பால், காந்தி நகர் நர்த்தன விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், ஆற்றங்கரை சித்தி விநாயகர், ரயில்வே குடியிருப்பு விநா யகர், கடலுார் சாலை விஜய விநாயகர், பெரியார் நகர் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.