மேலுார், : மேலுார் அருகே நா.கோயில்பட்டி அஞ்சூறு காத்த அய்யனார் கோயில் திருவிழா பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆனியில் நடக்கும். இந்த விழாவிற்காக நாவினிப்பட்டி மந்தையில் கிராமத்து பெரியவர்கள் தலைமையில் ஐந்து கிராமத்தினர் ஒன்று கூடி சுவாமி குதிரைகள் செய்ய முறையூரை சேர்ந்தவர்களிடம் நேற்று பிடி மண் கொடுத்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் பதினைந்து நாட்களுக்கு எண்ணெய் தாளிதம் இல்லாமல், மாமிசம் சாப்பிடாமல், செருப்பு அணியாமல் கடும் விரதம் இருப்பர். பதினைந்தாம் நாள் முடிவில் குதிரை எடுப்பு திருவிழா நடக்கும். நாவினிப்பட்டி, கூத்தப்பன்பட்டி, பெருமாள்பட்டி உட்பட ஐந்து கிராமத்தினர் பங்கேற்பர். ஜாதி, மத பேதமின்றி இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது இந்த புரவி எடுப்பு விழாவை தான்.