பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் ரூ. ஒருகோடியே 53 லட்சத்து 68 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயிலில் 19 நாட்களில் நிறைந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் தங்கம் 865 கிராம், வெள்ளி 12,500 கிராம், வெளிநாட்டு கரன்சி- 932, ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 134 கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், தாலி, உருவம், சுவாமி சிலைகள் உள்ளிட்டவையும் இருந்தன. இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா, திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிபணியாளர்கள் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.