தளவாய்புரம்: சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு 21 வகையான அபிஷேகம் சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். *தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலிலும் பிரதோஷ பூஜை நடந்தது.ஏராளமான பக்தர்கள் நந்தியை வழிபட்டனர். *சொக்கநாதன்புத்துார் தவநந்திகண்டேஸ்வரர் கோயிலில் நந்திக்கு பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடை நிர்வாக குழு தலைவர் நீராவிநம்பிராஜன் செய்தார்.